மருதமலை தனியார் ரெஸ்டாரண்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி : காப்பற்ற சென்ற முதியவரும் உயிரிழப்பு

கோவை : மருதமலை அருகே தனியார் ரெஸ்டாரண்ட்டுக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற முதியவரும் உயிர்நீத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : மருதமலை அருகே தனியார் ரெஸ்டாரண்ட்டுக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற முதியவரும் உயிர்நீத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மருதமலை சாலையில் உள்ள சட்டக்கல்லூரி அருகே பொதிகை ரெஸ்டாரண்ட் உள்ளது. இந்த ரெஸ்டாரண்டில் 7 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளமும் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சுமார் 11 மணி அளவில் குளிப்பதற்கான அனுமதி பெற்று, நீச்சல் குளத்தில் குளித்து சென்றுள்ளனர். 



இதில், அன்புச்செல்வன் என்ற மாணவன் நீச்சல் குளத்தில் 7 அடி ஆழத்தில் மூழ்கி ஆபத்தான சூழலில் தத்தளித்து வந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், அன்புச்செல்வனை காப்பாற்றும்படி சத்தம் எழுப்பினர். இதைக் கண்ட காவல் பணியில் இருந்த தேவராஜ் (60), மாணவனைக் காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்து உள்ளார். ஆனால், மாணவர் குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது, காவல் பணியாளர் தேவராஜையும் நீருக்குள் இழுத்துள்ளார். இதில், இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 



இந்த நிலையில், தகவலறிந்து வந்த வடவள்ளி போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முறையாக நீச்சல் பயிற்சியாளர்கள் இல்லாததும், முதலுதவிக்கு எந்த உபகரணமும் இல்லாததும் இவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆகவே, நீச்சல் குளம் வைத்திருப்பவர்கள் முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டுதான், குளத்தில் இறங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...