அந்தமானில் திரிணாமூலுடன் கூட்டணி அமைத்தது மக்கள் நீதி மய்யம்

கோவை : அந்தமான் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது.


கோவை : அந்தமான் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரபரப்புக்கு இடையில் இன்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அந்தமான் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், அந்தமானில், இரு கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

"மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனான இந்த சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தது. எங்கள் இரு கட்சிகளின் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன். வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய ஏப்ரல் 6-ஆம் தேதி அந்தமான் செல்கிறேன்," என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...