நாட்டில் உள்ள 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள 20% ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும். 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்குவதால், 25 கோடி மக்கள் பயன்பெறுவர். இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும், குறைந்தபட்ச மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். உலகிலேயே இதுவரை இதுபோன்ற திட்டம் அறிவிக்கப்படவில்லை," என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக ஆலோசிக்கவும், அந்த அறிக்கையை இறுதி செய்யவும் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள 20% ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும். 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்குவதால், 25 கோடி மக்கள் பயன்பெறுவர். இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும், குறைந்தபட்ச மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். உலகிலேயே இதுவரை இதுபோன்ற திட்டம் அறிவிக்கப்படவில்லை," என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக ஆலோசிக்கவும், அந்த அறிக்கையை இறுதி செய்யவும் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர்.