நீலகிரி : மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை இருளர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்றனர்.
நீலகிரி : மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை இருளர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்றனர்.

வேட்பு மனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆ. ராசா பேசும் போது :- என் மீது 2ஜி ஊழல் இருந்தபோது, நான் செய்தியாளர்களை சந்தித்து அதற்கான விளக்கங்களை அளித்தேன். தற்போது பிரதமர் மோடி மீது ரபேல் ஊழல் இருக்கும் போது, அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்காமல் ஓடி ஒளிகிறார். மக்களவைத் தேர்தலில் மத்தியில் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மோடிக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவோம்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். 2ஜி வழக்கில் நான் நிரபராதி என்று நிரூபித்தது போல், ரபேல் விவகாரத்தில் மோடியும் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும், என அவர் கூறினார்.