மருத்துவர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்திய விவகாரம் : தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு

கோவை : கோவையில் தனியார் பள்ளியில் மக்கள் நீதி மய்யத்தினர் மருத்துவர்களை சந்தித்து பேசிய விவகாரம் தொடர்பாக சம்பந்தபட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கோவை : கோவையில் தனியார் பள்ளியில் மக்கள் நீதி மய்யத்தினர் மருத்துவர்களை சந்தித்து பேசிய விவகாரம் தொடர்பாக சம்பந்தபட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, பெர்க்ஸ் பள்ளியில் மருத்துவர்களுடனான ஒரு மணி நேரம் கூடிய சந்திப்பை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டு வந்தார். அப்போது, முறையான அனுமதி இன்றி இந்த சந்திப்பு நடந்து கொண்டிருப்பதாகக் கூறி, தேர்தல் பறக்கும் படையினர், அதனை தடுத்து நிறுத்தினர். இதனால், மருத்துவர்கள் மற்றும் பிற தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு, அரசியல் அல்லாத சந்திப்பு தான் நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மருத்துவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய விவகாரம் தொடர்பாக, தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சிங்காநல்லூர் தொகுதி  தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, இன்று தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...