கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக காந்திபுரம் அருகே சி.பி.ஐ(எம்) தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.
கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக காந்திபுரம் அருகே சி.பி.ஐ(எம்) தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சி.பி.ஐ(எம்) இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் சி.பி.ஐ(எம்)-ன் பி.ஆர்.நடராஜன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் சி.பி.ஐ.(எம்) தேர்தல் அலுவலகத்தை தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு தலைவரும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொங்கலூர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதசார்பற்ற கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சி.பி.ஐ(எம்) இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் சி.பி.ஐ(எம்)-ன் பி.ஆர்.நடராஜன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் சி.பி.ஐ.(எம்) தேர்தல் அலுவலகத்தை தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு தலைவரும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொங்கலூர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதசார்பற்ற கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.