கோவையில் முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை : அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதையொட்டி,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை : அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதையொட்டி,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 18ம் தேதி ஒரே நாளில் நடைபெறுகிறது. அதோடு, காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்ந்து தேர்தல் நடைபெறுகிறது. கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளராக சி.பி.ஐ.(எம்) பி.ஆர் நடராஜன் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க., வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த இரு கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகளும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதனையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆட்சியர் அலுவலகம் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் முன்பே நிறுத்தப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...