வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீ : ஹெலிகாப்டர்களை கொண்டு அணைக்கும் பணி தீவிரம்

கோவை : வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீயை, இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை கொண்டு அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை : வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீயை, இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை கொண்டு அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளலூர் பகுதியில் சுமார் 690 ஏக்கர் பரப்பளவில் குப்பைகிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் தினசரி 700 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் மாநகராட்சியால் லாரிகள் மூலம் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதும் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதும் இந்த புகை மூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 5 மணி அளவில் குப்பை கிடங்கில் தீ பிடித்துள்ளது. இந்த தீயினை அணைக்கும் பணியில் கிட்டதட்ட மாநகரில் உள்ள ஆறு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு மாநகராட்சி தண்ணி லாரி உதவியுடன் தண்ணீர்கள் நிரப்பப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் இரவு பகல் பாராமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தீரத்தீர வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், தீயானது தற்போது வரை அணைந்த பாடில்லை. 

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இன்று 3-வது தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு உதவியாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

“காற்று காரணமாக தீயானது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று புகையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டர்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்கின்றனர் கோவை மாநகராட்சி அதிகாரிகள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...