கோவை : முறையான அனுதியில்லததால் தனியார் பள்ளியில் நடந்து கொண்டிருந்த கமல்ஹாசனின் மருத்துவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர்.
கோவை : முறையான அனுதியில்லததால் தனியார் பள்ளியில் நடந்து கொண்டிருந்த கமல்ஹாசனின் மருத்துவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர்.
மக்கள் நீதி மய்யத்தின் 2-வது வேட்பாளர் பட்டியலை நடிகர் கமல்ஹாசன் கோவையில் இன்று மாலை அறிவிக்க இருக்கிறார். இந்த நிலையில், பெர்க்ஸ் பள்ளியில் மருத்துவர்களுடனான ஒரு மணி நேரம் கூடிய சந்திப்பை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டு வந்தார். அப்போது, முறையான அனுமதி இன்றி இந்த சந்திப்பு நடந்து கொண்டிருப்பதாகக் கூறி, தேர்தல் பறக்கும் படையினர், அதனை தடுத்து நிறுத்தினர். இதனால், மருத்துவர்கள் மற்றும் பிற தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு, அரசியல் அல்லாத சந்திப்பு தான் நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யத்தினரிடம் கேட்ட போது, “இந்த சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டு, எங்களது கட்சி உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம். இது குறித்து அதிகாரிகளிடம் வாய்மொழியில் அனுமதி வாங்கியுள்ளோம். இருப்பினும், இந்தக் கூட்டத்தை தேர்தல் பறக்கும் படையினர் பாதியில் தடுத்து நிறுத்தியது ஏமாற்றமளிக்கும் செயலாகும். இது தொடர்பாக முறையான செய்தி வெளியிடுவோம்,” என்றனர்.