நீலகிரி : குடிநீர் பிரச்னையை தீர்க்காத அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தலை புறக்கணிக்க கோத்தகிரி தாந்த நாடு மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
நீலகிரி : குடிநீர் பிரச்னையை தீர்க்காத அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தலை புறக்கணிக்க கோத்தகிரி தாந்த நாடு மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 2-வது வார்டு உட்பட்ட தாந்தநாடு கிராமத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிதண்ணீருக்கு ஆதாரமாக விளங்கும் ஓடைகளை தனியார் காட்டேஜ்கள், தனியார் பள்ளிகள் ஆக்கிரமித்துள்ளனர் .மேலும், இதுகுறித்து கடந்த 4 வருடங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அரசுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பியும் எந்தவித பயனும் இல்லாமல் உள்ளது. அரசு அதிகாரிகள் பெயரளவில் நில அளவை செய்துவிட்டு சென்று உள்ளதால், இதுவரை தீர்வு காணாததால் தற்போது கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர்.