கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தனி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தின் துரித நடவடிக்கையின் மூலம் தீயை அணைத்தனர்.
கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தனி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தின் துரித நடவடிக்கையின் மூலம் தீயை அணைத்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் நேற்று இரவு திடீரென விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் வாகனங்களைக் கொண்டு தண்ணீர் அடித்து தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

“எதிர்காலத்தில் இதுபோன்ற தீ பரவும் சம்பவங்களை தடுக்கும் வகையில், குப்பைக்கிடங்கின் மேட்டை பொக்லென் இயந்திரங்களைக் கொண்டு குப்பை குவியலாகப் பிரித்து பராமரிப்பு செய்யப்படவுள்ளது. கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு 5 துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை விழிப்புடன் மேற்கொள்வார்கள். தற்பொழுது இயங்கி
வருகிற 8 தண்ணீர் டேங்கர் லாரியுடன் கூடுதலாக ஐந்து லாரிகளும், இரண்டு பொக்லைன் இயந்திரங்களோடு கூடுதலாக இரண்டு பொக்லைன் இயந்திரங்களும், மேலும் ஒரு புல்டோசர் வாகனமும் வாடகைக்கு அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்கள். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கொண்டு குப்பை மேட்டை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன,” என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார்.

முன்னதாக, தீ விபத்து ஏற்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி செயற்பொறியாளர்
சரவணக்குமார், உதவிப் பொறியாளர் ரவிக்கண்ணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் நேற்று இரவு திடீரென விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவின் பேரில், மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் வாகனங்களைக் கொண்டு தண்ணீர் அடித்து தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

“எதிர்காலத்தில் இதுபோன்ற தீ பரவும் சம்பவங்களை தடுக்கும் வகையில், குப்பைக்கிடங்கின் மேட்டை பொக்லென் இயந்திரங்களைக் கொண்டு குப்பை குவியலாகப் பிரித்து பராமரிப்பு செய்யப்படவுள்ளது. கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு 5 துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை விழிப்புடன் மேற்கொள்வார்கள். தற்பொழுது இயங்கி
வருகிற 8 தண்ணீர் டேங்கர் லாரியுடன் கூடுதலாக ஐந்து லாரிகளும், இரண்டு பொக்லைன் இயந்திரங்களோடு கூடுதலாக இரண்டு பொக்லைன் இயந்திரங்களும், மேலும் ஒரு புல்டோசர் வாகனமும் வாடகைக்கு அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்கள். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கொண்டு குப்பை மேட்டை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன,” என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார்.

முன்னதாக, தீ விபத்து ஏற்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி செயற்பொறியாளர்
சரவணக்குமார், உதவிப் பொறியாளர் ரவிக்கண்ணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.