நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு ஆதரவு : பச்சை தமிழகம் கட்சி

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் பச்சை தமிழகம் கட்சி போட்டியிடாது எனவும், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு ஆதரவு எனவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சு.ப. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் பச்சை தமிழகம் கட்சி போட்டியிடாது எனவும், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு ஆதரவு எனவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சு.ப. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கோவையில் அகில இந்திய மக்கள் மேடையின் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் கோரிக்கை சாசன வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அணு உலை எதிர்ப்பாளருமான சு.ப. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது :-நாடாளுமன்ற தேர்தலில் பச்சை தமிழகம் கட்சி போட்டியிடாது. தனிப்பட்ட எந்த கட்சிக்கும் ஆதரவும் தராது. மத்திய மோடி அரசு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளது பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும். மதவெறி, சாதிவெறி, பண வெறி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதால், பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு ஆதரவளிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...