கோவை: மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை அ.தி.மு.க. கணிக்க முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விமர்சனம் குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
கோவை: மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை அ.தி.மு.க. கணிக்க முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விமர்சனம் குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
கோவையில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பெருவிழா நாளை மாலை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகின்றது. இதில், பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் கமலஹாசனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி காணாமல் போய்விடும் என அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அவர்கள் பிர்த்தனை எல்லாம் எங்கள் எதிர்காலம் என்று எண்ண முடியாது. எங்களின் எதிர்காலத்தை அவர்களால் கணிக்கவும் முடியாது, என்றார். மேலும், 21 வேட்பாளர் பட்டியலில் 8 தொழில் அதிபர்கள், 3 மருத்துவர், 3 வழக்கறிஞர் என பணம் படைத்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லையே என்ற கேள்விக்கு, நாளை மாநாட்டில் இது குறித்து விளக்கப்படும். குறைகள் இருக்காது எனக் கூறினார்.
மேலும், கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருவது குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்ததாவது, கட்சியில் இருந்து சென்றவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அல்ல என்றும், அவர்கள் சென்றதால் இதனை நான் சொல்லவில்லை, என தெரிவித்தார்.