கோவையில் பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

கோவை : கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.


கோவை : கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.



கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரியாரியல்வாதி பாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். மேலும், பாரூக்கின் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று அண்ணாமலை அரங்கில் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 'மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்' என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும் எனவும், மத அடிப்படைவாதங்கள் மாற வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சுந்தரவள்ளி, எழுத்தாளர் பீர் முஹம்மது, எழுத்தாளர் பாமரன் மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர் நேரு தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் சுயமரியாதைத் திருமணமும் நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...