உடுமலையில் சட்டவிதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

திருப்பூர் : உடுமலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, தனியார் நகை குடோனிற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் : உடுமலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, தனியார் நகை குடோனிற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 



உடுமலை அருகே அந்தியூர் பகுதியில் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் அதிகாரி சத்யா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உடுமலை பகுதியில் தனியார் நகை கடையிலிருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கோவையில் உள்ள குடோனிற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி தோ்தல் அதிகாரிகள் சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இருப்பதாக நகை கடை ஊழியர்கள் தெரிவித்தனர். 



இருப்பினும், சந்தேகமடைந்த அதிகாரிகள் முறையான ஆவணங்களை காண்பித்து நகைகளை எடுத்துச் செல்லுமாறு கூறினர். இதனை தொடர்ந்து, நகைகள் கொண்டு வரப்பட்ட வாகனத்தை உடுமலை வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்போடு நிறுத்தி வைத்துள்ளனர். 

தனியார் நகை கடை நிர்வாகத்தினர் கோவையில் இருந்து உரிய ஆவணங்களைக் கொண்டு வருவதால், நகைகளை வாகனத்தில் இருந்து இறக்காமல் பாதுகாத்து வருகின்றனர். "இரவுக்குள் ஆவணங்களைக் காண்பிக்கும் பட்சத்தில், உரியவர்களிடம் நகைகள் ஒப்படைக்கப்படும். இல்லையெனில், அரசு கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்படும்," என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...