கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய தேர்தல் வாக்காளர்களை இணைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய தேர்தல் வாக்காளர்களை இணைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில், ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 17 ஆயிரத்து 683 பேரும், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 43 ஆயிரத்து 967 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 311 பேரும் அடங்குவர்.
அதன் பின்பு, விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் பணிகளும், 18 வயது பூர்த்தியடைந்து வாக்களிக்க தகுதியுள்ள புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 3,072 வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களும், வாக்காளர்களை சேர்க்கும் பணிகளும் மார்ச் 16-ம் தேதி அன்று முடிவு பெற்றது. தற்போது, ஜனவரி 31-ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன், புதிதாக இணைக்கப்பட உள்ள வாக்காளர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜனவரி 31-ம் தேதிக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்காளர் சேர்க்கை முகாம்களில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்," என்றார்.
கோவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில், ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 17 ஆயிரத்து 683 பேரும், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 43 ஆயிரத்து 967 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 311 பேரும் அடங்குவர்.
அதன் பின்பு, விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் பணிகளும், 18 வயது பூர்த்தியடைந்து வாக்களிக்க தகுதியுள்ள புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 3,072 வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களும், வாக்காளர்களை சேர்க்கும் பணிகளும் மார்ச் 16-ம் தேதி அன்று முடிவு பெற்றது. தற்போது, ஜனவரி 31-ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன், புதிதாக இணைக்கப்பட உள்ள வாக்காளர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜனவரி 31-ம் தேதிக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்காளர் சேர்க்கை முகாம்களில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்," என்றார்.