நீலகிரி : கோத்தகிரியில் தேயிலைத் தூளில் கலப்படம் செய்வதற்காக தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட கலப்படத் தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி : கோத்தகிரியில் தேயிலைத் தூளில் கலப்படம் செய்வதற்காக தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட கலப்படத் தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக, பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்த லாரியை குஞ்சப் பண்ணை நுழைவு வரி வசூலிக்கும் முருகன் மற்றும் சோதனைச் சாவடி தலைமை காவலர் பாலா ஆகியோர் பிடித்து, தேயிலை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, விரைந்து வந்த தேயிலை வாரிய அதிகாரிகள் லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், தேயிலைத்தூளில் கலப்படம் செய்வதற்காக 7 டன் எடை கொண்ட கலப்பட தேயிலைத்தூள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து லாரியின் ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் முருகேஷ் என்பவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கோத்தகிரியில் பிடிபட்ட கலப்பட தேயிலை தூளை எடுத்து வந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நாக்குபெட்டா விவசாய சங்கத்தின் மூலம் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக, பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்த லாரியை குஞ்சப் பண்ணை நுழைவு வரி வசூலிக்கும் முருகன் மற்றும் சோதனைச் சாவடி தலைமை காவலர் பாலா ஆகியோர் பிடித்து, தேயிலை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, விரைந்து வந்த தேயிலை வாரிய அதிகாரிகள் லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், தேயிலைத்தூளில் கலப்படம் செய்வதற்காக 7 டன் எடை கொண்ட கலப்பட தேயிலைத்தூள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து லாரியின் ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் முருகேஷ் என்பவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கோத்தகிரியில் பிடிபட்ட கலப்பட தேயிலை தூளை எடுத்து வந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நாக்குபெட்டா விவசாய சங்கத்தின் மூலம் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.