திருப்பூர் : திருப்பூரில் நிலபுரோக்கரின் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து ரூ. 14 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் நிலபுரோக்கரின் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து ரூ. 14 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் 15 வேலம்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர், நில புரோக்கராக இருந்து வருகிறார். இவரது மனைவி சத்தியசுந்தரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கணிணி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இருவரும் வழக்கம்போல பணிக்கு சென்றுவிட்ட நிலையில், அவர்களது வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவின் லாக்கரையும் உடைத்து, அதனுள் இருந்த ரூ. 14 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் 15 வேலம்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர், நில புரோக்கராக இருந்து வருகிறார். இவரது மனைவி சத்தியசுந்தரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கணிணி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இருவரும் வழக்கம்போல பணிக்கு சென்றுவிட்ட நிலையில், அவர்களது வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவின் லாக்கரையும் உடைத்து, அதனுள் இருந்த ரூ. 14 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.