மேட்டுப்பாளையத்தில் தேர்தல் விதிகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.42 லட்சம் பறிமுதல்

கோவை : மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

நடைபெற உள்ள மக்களை தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல்களை தடுக்கவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50,000-க்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்யவும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நான்கு தேர்தல் பறக்கும் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்தின் நுழைவு சாலைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை பிரிவின் மண்டல அதிகாரியான ரவிச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட போலீசார், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது, அந்த சாலை வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தௌபீக் அலி என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, பணத்தை கைப்பற்றி மேட்டுப்பாளையம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில் அந்த பணத்தை தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்க எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், தேர்தல் விதிகளை மீறி உரிய ஆதாரம் கொடுக்கப்படாத காரணத்தால், அதனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...