பேக்கரி கடையில் பெண்ணின் கைப்பையுடன் ரூ. 20,000 ரொக்கம் திருட்டு : மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

கோவை : மேட்டுப்பாளையத்தில் பேக்கரியில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கைப்பையுடன், ரூ. 20,000 ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பேக்கரியில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கைப்பையுடன், ரூ. 20,000 ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாயிதா. இவர் புதிய ஆடைகளை மொத்தமாக எடுத்து வந்து, அதனை சில்லறை முறையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். 

இந்த நிலையில், நேற்று இரவு இவர் வியாபாரத்தை முடித்துக்கொண்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு பேக்கரியில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, தனது கைப்பையில் வியாபாரம் செய்த ரூ. 20,000 பணத்துடன் எடுத்துச் சென்றுள்ளார். அந்த பேக்கரியில் தேநீர் அருந்திவிட்டு, தனது கைப் பையினை அங்கேயே வைத்துவிட்டு, அருகில் இருந்த ஓட்டலுக்கு உணவு பார்சல் வாங்க சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், ஒரு தனது மகனுடன் தேநீர் அருந்த வருவது போல் வந்து, அங்கு இருந்த அந்த கைப்பையினை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். 

இதனையடுத்து, அங்கு வந்து பார்த்த சாயிஷா தனது ரூ. 20,000 பணம் மற்றும் கைப்பை திருடப்பட்டது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், மேட்டுப்பாளையம் காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். 

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேக்கரியில் உள்ள கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்த போது, அதில் நீல நிற சட்டை அணிந்து வந்த நபர் கைப்பையினை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பதிவினை ஆதாரமாக வைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...