நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குற்றவாளி சயானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குற்றவாளி சயானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை செசன்ஸ் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 8-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி வடமலை இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தார். உடனே குற்றவாளிகள் தலைமறைவாகினர்.

இதனிடையே, சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் வழக்கறிஞர், இருவரையும் கைது செய்ய தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, அவர்களை 4 தினங்களுக்கு கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார். இந்த சூழலில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை திருச்சூரில் கைது செய்த போலீசார், உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சயான் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கோடநாடு கொலை வழக்கு சயானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகை செசன்ஸ் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 8-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி வடமலை இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தார். உடனே குற்றவாளிகள் தலைமறைவாகினர்.

இதனிடையே, சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் வழக்கறிஞர், இருவரையும் கைது செய்ய தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, அவர்களை 4 தினங்களுக்கு கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார். இந்த சூழலில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை திருச்சூரில் கைது செய்த போலீசார், உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சயான் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கோடநாடு கொலை வழக்கு சயானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று உத்தரவிட்டார்.