நீலகிரி : நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
நீலகிரி : நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நீலகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடவுள்ளன. இந்த நிலையில், வேட்புமனு தேதி அறிவிக்கப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில், இன்று மட்டுமே காலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணிமேகலையும், மதியம் அ.தி.மு.க.வை சேர்ந்த தியாகராஜனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே (மார்ச் 26) எஞ்சியுள்ள நிலையில், இன்னும் எத்தனை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடவுள்ளன. இந்த நிலையில், வேட்புமனு தேதி அறிவிக்கப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில், இன்று மட்டுமே காலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணிமேகலையும், மதியம் அ.தி.மு.க.வை சேர்ந்த தியாகராஜனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே (மார்ச் 26) எஞ்சியுள்ள நிலையில், இன்னும் எத்தனை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.