இது உதகை ஜி1 காவல்நிலையமா...? இல்ல அ.தி.மு.க. பிரச்சார மேடையா..?

நீலகிரி : உதகையில் ஜி1 காவல்நிலையத்தை பிரச்சார மேடையாக அ.தி.மு.க.வினர் பயன்படுத்திய சம்பவம் பணியில் இருந்த காவலர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியது.


நீலகிரி : உதகையில் ஜி1 காவல்நிலையத்தை பிரச்சார மேடையாக அ.தி.மு.க.வினர் பயன்படுத்திய சம்பவம் பணியில் இருந்த காவலர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியது. 



நீலகிரி மக்களவை தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தியாகராஜன் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளருடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்தவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு முன்பே நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்த அ.தி.மு.க., வேட்பாளர் தியாகராஜன், கட்சியினருடன் இணைந்து பொதுமக்களை சந்திக்க வேண்டி இருந்ததால் மேடானப் பகுதியை கட்சியினர் தேடி அலைந்தனர். அப்போது, உதகை ஜி1 காவல்நிலையம் மேடான பகுதியில் இருந்ததால், காவல்நிலைய சுவர் மீது ஏறி தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கினர். 



வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு நூறு மீட்டருக்குள் கட்சியினரை அனுமதிக்காத காவல் துறையினரின் செயல்பாட்டிற்கு மத்தியில், காவல் நிலையத்தையே ஆளும் கட்சியினர் பிரச்சார மேடையாக்கினர். காவல்நிலையத்தின் மேடையில் மாநிலங்களவை, மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்ததால், காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...