Breaking: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஜெ. தீபா ஆதரவு

சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு கிடைக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக சமீபத்தில் கூறிய எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ. தீபா தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அ.தி.மு.க. உடன் இணைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது அ.தி.மு.க.வைச் சார்ந்த இயக்கம்தான். பேரவையை அ.தி.மு.க.வுடன் இணைப்பது பற்றி கடந்த 3 மாதங்களாகவே மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டனாகவும் பணியாற்ற தயாராக இருக்கிறேன். 

தேர்தலுக்குப் பிறகு பேரவையை அ.தி.மு.க.வுடன் இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன், எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...