கோவையில் தொடர்ச்சியாக பான் மசாலா பொருட்களை கடத்தி வந்த தனியார் டிராவல்ஸ் : 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே நெம்பர் ஒன் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே நெம்பர் ஒன் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.



தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் சோதனைகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்களை டன் கணக்கில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கைப்பற்றி வருகின்றனர். அதேபோல, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர். இருப்பினும், சமூக விரோத கும்பல்கள், பல வழிகளில் குட்கா பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பான்மசாலா, குட்கா பொருட்கள் தனியார் பேருந்துகள் மூலம் கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் விஜய லலிதாம்பிகை தலைமையில் டிராவல்ஸ் பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பாப்பநாயக்கன் பாளையம் அருகே நெம்பர் ஒன் டிராவல்ஸ் என்ற பேருந்திலிருந்து 150 கிலோ எடையுள்ள 3 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தனியார் பேருந்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே பேருந்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தப்பட்டதால், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பேருந்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...