களிமங்கலம் வனப்பகுதியின் அருகே மேற்கொள்ளவிருக்கும் கட்டுமானப் பணிகளுக்கு தடை கோரி மனு

கோவை : காளியமங்கலம் அருகே வனப்பகுதிக்கு மிக அருகே கட்டப்பட உள்ள தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு தடை விதிக்கக்கோரி மதுக்கரை வன அதிகாரிக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

கோவை : காளியமங்கலம் அருகே வனப்பகுதிக்கு மிக அருகே கட்டப்பட உள்ள தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு தடை விதிக்கக்கோரி மதுக்கரை வன அதிகாரிக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். 



இது தொடர்பாக அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகில் அமைந்துள்ளது காளியமங்கலம் கிராமம். இப்பகுதி மதுக்கரை வனச்சரக வட்டத்திற்குள் வருகிறது. இங்கு வனப்பகுதிக்கு மிக அருகில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தினால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில், கட்டிடம் கட்டப்படும் பகுதியானது, யானைகளின் வழித்தடமாகும். இந்த தடத்தை மறித்தால், யானைகள் குடியிருப்புகளுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், இவ்விடமானது, நீர்வழிப் பாதையாகும். இங்கு சுமார் 2,000 மக்கள் குடியேறும் போது, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகள் மிகவும் பாதிக்கப்படும். எனவே, வனவிலங்குகள், சுற்றுச்சூழல், கிராம மக்கள் மற்றும் விவசாயம் நலன் கருதி இத்திட்டத்திற்கு தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...