கோவை : நீதிமன்ற உத்தரவை மீறி அக்னிதேவி படம் நாளை திரையிடப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என திரைப்பட நடிகர் பாபி சின்ஹா வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கோவை : நீதிமன்ற உத்தரவை மீறி அக்னிதேவி படம் நாளை திரையிடப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என திரைப்பட நடிகர் பாபி சின்ஹா வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கோவை சுங்கம் ஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்த சீண்டோ ஸ்டுடியோஸ் (seantoa studio's) சார்பில், ராஜேஷ்குமார் எழுதிய கதையை, கடந்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திரைப்பட நடிகர் பாபி சின்ஹாவை வைத்து திரைபடமாக எடுக்கப்பட்டது. திரைபடத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டு மீதம் உள்ள காட்சிகளை டூப் போட்டு காட்சிகளை எடுத்து உள்ளனர். இதனை அறிந்து நடிகர் பாபி சின்ஹா, சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்துள்ளதாக புகார் அளித்து உள்ளார். இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ‘அக்னிதேவ்’என்ற பெயரில் பதியப்பட்ட திரைபடத்தை அக்னிதேவி என்ற பெயரில் நாளை வெளியிடப்படும் என நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரங்கள் செய்துள்ளன.
இதனை அறிந்த நடிகர் பாபி சின்ஹா தரப்பில் கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரணை செய்த நீதிபதி பொறுப்பு மலர்மன்னன், தற்போதைய நிலையிலேயே (status quo)தொடர வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த திரைபடத்தை பார்வையிட்டு உண்மை தன்மையை அறிந்து நீதிமன்ற அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் கார்த்திகா என்பவரை நியமனம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து பாபி சின்ஹா தரப்பு வழக்கறிஞர் பரமேஸ்வரன் கூறியதாவது :- நீதிமன்ற உத்தரவுப்படி, நாளை இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட கூடாது. மீறி வெளியிடும் பட்சத்தில் இழப்பீடு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு படத்தை வெளியிடும் திரையரங்கு, வெளியிடும் அனுமதி தரும் கியூப் அமைப்பு, சீண்டோஸ் ஸ்டுடியோ மற்றும் அதன் உரிமையாளர் ஜான் பால்ராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபடும், என தெரிவித்தார்.