கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் கேம்ப் ஆபிஸில் உள்ள குடியிருப்பில் இருக்கும் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் கேம்ப் ஆபிஸில் உள்ள குடியிருப்பில் இருக்கும் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் பாலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன்னுசாமி. இவர் தனது மனைவி துளசிமணி மற்றும் மகன் விக்னேஷ் (25) ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் குடியிருந்து வருகிறார். பொன்னுசாமி அங்கு உதவியாளராக உள்ளார். இந்த நிலையில், இவரது மகன் விக்னேஷ் இன்று மசக்காளிபாளையத்தில், 60 வயது நண்பர் ஒருவர் இறப்பிற்கு சென்றுவிட்டு மதியம் 3 மணியளவில் வீடு திரும்பியவர், வீட்டின் உள்ளே சென்று கதவை தாளிட்டு கொண்டார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததைக் கண்டு, கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, விக்னேஷ் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பந்தய சாலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் முகாமில் அலுவலக ஊழியரின் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.