கோவை பழங்குடியின மக்களுக்கு லந்தனா கமாராவில் நாற்காலிகளை செய்யும் கைத்தொழில் பயிற்சி

கோவை : கோவை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், லந்தனா கமாராவில் நாற்காலிகளை செய்யும் கைத்தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், லந்தனா கமாராவில் நாற்காலிகளை செய்யும் கைத்தொழில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் பசுமை திறன் மேம்பாட்டு திட்டமும், கோவை அமிர்தா விஸ்வா வித்யபீதமும் இணைந்து சிறுவாணியை சுற்றியுள்ள சிங்கம்பதி, கல்கொதிபதி மற்றும் சர்கார்பொரதி உள்ளிட்ட மலைகிராமங்களைச் சேர்ந்த 100 பழங்குடியினருக்கு சுயதொழில் கற்றுக் கொடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது, உண்ணிச் செடியான லந்தனா கமராவைப் பயன்படுத்தி மரச்சாமான்களை தயாரிக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களில் 30 பேர் முறையாக பயிற்சி பெற்று, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்றுள்ளனர். 



இவர்களுக்காக சிங்கம்பதி கிராமத்தில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு லந்தனா கமாரா செடிகளைப் பயன்படுத்தி நாற்காலிகளை செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக, செடிகளை எவ்வாறு பயன்படுத்துவது, எப்படி நாற்காலிகளை உருவாக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

பெங்களூரூவைச் சேர்ந்த பயிற்சியாளர்களின் கீழ் 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த செவ்வாய்கிழமை அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 



"வனப்பகுதிகளில் உட்புறத்தில் வசிக்கும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பின்னர், பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்து, அதன்மூலம் பயனடையலாம். இந்த தயாரிப்புகள், மூங்கில்களால் செய்யப்படும் பொருட்களை விட விலை குறைவானது. லந்தனா கமாராவில் தயாரிக்கப்படும் தயாரிப்புகள் ரூ. 14,000 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. இதனுடன், ஒப்பிடும் போது, மூங்கில் அல்லது மரங்களில் செய்யப்பட்ட பொருட்கள் இருமடங்கு விலை அதிகமாகும்," என்கிறார் இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், அமிர்தா விஸ்வா வித்யபீதத்தின் இணை பேராசிரியருமான மாயா மகாஜன்.



இதனிடையே, இந்தத் திட்டத்தினால் தயாரிக்கப்படும் பொருட்களை கோவை குற்றாலம், அமிர்தா விஸ்வா வித்யபீதம் மற்றும் ஈஷா யோக மையம் ஆகிய இடங்களில் விற்பனை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர். 

"நாங்கள் நாள்தோறும் கூலி வேலைக்காக நகரங்களை நோக்கி செல்வோம். ஆனால், தற்போது எங்களது கிராமத்திலேயே இதுபோன்ற வாய்ப்பை வழங்கியுள்ளனர்," எனக் கூறுகிறார் சிங்கம்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆர். சின்னத்தாயி. 

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...