கோவை : பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட புழுதிப் புயலால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னம்பாளையம் அருகே ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளது. இந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று மதியம் திடீரென புழுதி புயல் ஏற்பட்டது. இது அதிவேகமாக வானத்தை நோக்கி சுமார் 20 அடி உயரத்தில் எழுந்தது. இந்த காட்சிகளை அருகே இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பறிமாறி வருகின்றனர்.