வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., உதயசூரியன் சின்னத்தில் போட்டியயிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., உதயசூரியன் சின்னத்தில் போட்டியயிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகளிடம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. வலியுறுத்தியிருந்தது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் இதற்கு மறுப்பு தெரிவித்தது. ஆனால், ஒரு சில சிறிய கட்சிகள் ஒப்புக்கொண்டன. இருப்பினும், ம.தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., உதயசூரியன் சின்னத்தில் போட்டியயிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகளிடம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. வலியுறுத்தியிருந்தது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் இதற்கு மறுப்பு தெரிவித்தது. ஆனால், ஒரு சில சிறிய கட்சிகள் ஒப்புக்கொண்டன. இருப்பினும், ம.தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., உதயசூரியன் சின்னத்தில் போட்டியயிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் போட்டியிடுவார், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.