கோவை : லாலி ரோட்டில் மேம்பாலம் கட்டுவற்கு, முதற்கட்டமாக மண் பரிசோதனை பணிகள் இன்று தொடங்கியது.
கோவை : லாலி ரோட்டில் மேம்பாலம் கட்டுவற்கு, முதற்கட்டமாக மண் பரிசோதனை பணிகள் இன்று தொடங்கியது.

கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கோவையில் உள்ள லாலி சாலையில் மேம்பாலம் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, லாலி ரோட்டில் பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டனர். தமிழ்நாடு வேளாண்., கல்லூரி, பாரதியார் பல்கலக்கழகம், கோவை சட்டக் கல்லூரி மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில், இந்த மேம்பாலம் கட்டுவது, நல்ல பயனுடையதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதற்கட்டமாக, மண் பரிசோதனை செய்யும் பணிகள் இன்று தொடங்கியது. சாலையில் துளையிட்டு, அதில் எடுக்கப்படும் மண் ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய்ப்படுகிறது. இதனடிப்படையில், பாலக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.