டெல்லி : அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
டெல்லி : அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கு தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பாக, மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் வரை மட்டுமே செலவிட வேண்டும். இந்தப் பட்டியலில் வாகனங்கள், பணியாட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், உணவு பொருட்கள், பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள், பிளக்ஸ்கள் உள்ளிட்டவை அடங்கும். 5 ஸ்டார் ஓட்டலில் ஏ.சி. டபுள் பெட்ரூமிற்கு நாளொன்றுக்கு ரூ.9,300ம், 3 ஸ்டார் ஓட்டலில் ரூ. 5,800 வரை மட்டுமே செலவிட வேண்டும்.
அதேசமயம், மட்டன் பிரியாணி ஒரு பாக்கெட் ரூ.200 மற்றும் சிக்கன் பிரியாணி ஒரு பாக்கெட் ரூ.180 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும், மீல்ஸ் ரூ.100, டிபன் ரூ.100, டீ ரூ.10, பால் ரூ.15, வெஜிடபிள் ரைஸ் ரூ.50, இளநீர் ரூ.40, பூசணிக்காய் ரூ.120, புடவை மற்றும் டி-ஷர்ட் முறையே ரூ.200 மற்றும் ரூ.175 அளவிற்கு செலவு செய்ய வேண்டும்.
வரும் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு முன்பை விட அதிக செலவாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், எலக்ட்ரானிக் கருவிகள், எல்.இ.டி ஸ்கிரீன், ஏசி உள்ளிட்டவற்றின் பங்கு அதிகரித்துள்ளது.
வால் சைஸ் எல்.இ.டி வாடகை கட்டணம் 8 மணி நேரத்திற்கு ரூ.12,000, திருமண மண்டபம் புக்கிங் கட்டணம் நாளொன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.6,000 வரை மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் செலவின பார்வையாளர்கள் இருவரை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை வீடியோ பதிவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கு தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பாக, மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் வரை மட்டுமே செலவிட வேண்டும். இந்தப் பட்டியலில் வாகனங்கள், பணியாட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், உணவு பொருட்கள், பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள், பிளக்ஸ்கள் உள்ளிட்டவை அடங்கும். 5 ஸ்டார் ஓட்டலில் ஏ.சி. டபுள் பெட்ரூமிற்கு நாளொன்றுக்கு ரூ.9,300ம், 3 ஸ்டார் ஓட்டலில் ரூ. 5,800 வரை மட்டுமே செலவிட வேண்டும்.
அதேசமயம், மட்டன் பிரியாணி ஒரு பாக்கெட் ரூ.200 மற்றும் சிக்கன் பிரியாணி ஒரு பாக்கெட் ரூ.180 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும், மீல்ஸ் ரூ.100, டிபன் ரூ.100, டீ ரூ.10, பால் ரூ.15, வெஜிடபிள் ரைஸ் ரூ.50, இளநீர் ரூ.40, பூசணிக்காய் ரூ.120, புடவை மற்றும் டி-ஷர்ட் முறையே ரூ.200 மற்றும் ரூ.175 அளவிற்கு செலவு செய்ய வேண்டும்.
வரும் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு முன்பை விட அதிக செலவாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், எலக்ட்ரானிக் கருவிகள், எல்.இ.டி ஸ்கிரீன், ஏசி உள்ளிட்டவற்றின் பங்கு அதிகரித்துள்ளது.
வால் சைஸ் எல்.இ.டி வாடகை கட்டணம் 8 மணி நேரத்திற்கு ரூ.12,000, திருமண மண்டபம் புக்கிங் கட்டணம் நாளொன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.6,000 வரை மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் செலவின பார்வையாளர்கள் இருவரை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை வீடியோ பதிவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.