அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்தது தேர்தல் ஆணையம்

டெல்லி : அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.

டெல்லி : அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 

இந்த நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கு தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பாக, மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் வரை மட்டுமே செலவிட வேண்டும். இந்தப் பட்டியலில் வாகனங்கள், பணியாட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், உணவு பொருட்கள், பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள், பிளக்ஸ்கள் உள்ளிட்டவை அடங்கும். 5 ஸ்டார் ஓட்டலில் ஏ.சி. டபுள் பெட்ரூமிற்கு நாளொன்றுக்கு ரூ.9,300ம், 3 ஸ்டார் ஓட்டலில் ரூ. 5,800 வரை மட்டுமே செலவிட வேண்டும். 

அதேசமயம், மட்டன் பிரியாணி ஒரு பாக்கெட் ரூ.200 மற்றும் சிக்கன் பிரியாணி ஒரு பாக்கெட் ரூ.180 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும், மீல்ஸ் ரூ.100, டிபன் ரூ.100, டீ ரூ.10, பால் ரூ.15, வெஜிடபிள் ரைஸ் ரூ.50, இளநீர் ரூ.40, பூசணிக்காய் ரூ.120, புடவை மற்றும் டி-ஷர்ட் முறையே ரூ.200 மற்றும் ரூ.175 அளவிற்கு செலவு செய்ய வேண்டும். 

வரும் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு முன்பை விட அதிக செலவாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், எலக்ட்ரானிக் கருவிகள், எல்.இ.டி ஸ்கிரீன், ஏசி உள்ளிட்டவற்றின் பங்கு அதிகரித்துள்ளது. 

வால் சைஸ் எல்.இ.டி வாடகை கட்டணம் 8 மணி நேரத்திற்கு ரூ.12,000, திருமண மண்டபம் புக்கிங் கட்டணம் நாளொன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.6,000 வரை மட்டுமே இருக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் செலவின பார்வையாளர்கள் இருவரை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை வீடியோ பதிவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...