நீலகிரி : கூடலூர் அருகே வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டுப் பூனையின் குட்டி வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.
நீலகிரி : கூடலூர் அருகே வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டுப் பூனையின் குட்டி வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.
கூடலூரை அடுத்துள்ள கோழி பாலம் கல்லூரியை ஒட்டிய குடியிருப்புப் பகுதியில் அதிகாலை நேரத்தில் காட்டுப் பூனை குட்டி ஒன்று தனியாக சுற்றியுள்ளது. இதனை சிறுத்தை அல்லது சிறுத்தை பூனையின் குட்டியாக இருக்கலாம் என நினைத்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், அந்தக் காட்டுப் பூனை குட்டியை அங்கிருந்து மீட்டு வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "சுமார் 6 மாதம் உள்ள இந்தக் காட்டுப் பூனை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வனப்பகுதியில் விட நடவடிக்கை முடிவு செய்துள்ளோம்," என்றார்.
கூடலூரை அடுத்துள்ள கோழி பாலம் கல்லூரியை ஒட்டிய குடியிருப்புப் பகுதியில் அதிகாலை நேரத்தில் காட்டுப் பூனை குட்டி ஒன்று தனியாக சுற்றியுள்ளது. இதனை சிறுத்தை அல்லது சிறுத்தை பூனையின் குட்டியாக இருக்கலாம் என நினைத்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், அந்தக் காட்டுப் பூனை குட்டியை அங்கிருந்து மீட்டு வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "சுமார் 6 மாதம் உள்ள இந்தக் காட்டுப் பூனை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வனப்பகுதியில் விட நடவடிக்கை முடிவு செய்துள்ளோம்," என்றார்.