கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முதலமைச்சரின் பெயரையும், துணை முதலமைச்சரின் பெயரையும் இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முதலமைச்சரின் பெயரையும், துணை முதலமைச்சரின் பெயரையும் இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த சிலர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது இவ்வழக்கை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரபரப்பி வருவதாகவும், அவர்கள் மீது அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பொள்ளாச்சி வழக்கில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளம் ஒன்றில், 1 நிமிடம் 39 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த காணொளியில் பார் நாகராஜனின் திருமணத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலந்து கொண்டது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த காணொளி பொள்ளாச்சி ஜெயராமன் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியாகும்.
மக்கள் மத்தியில் அ.தி.மு.க.,வினரின் பெயரை சீர்குலைக்கும் பொருட்டு, அந்த சமூக வலைதளங்களில் பார் நாகராஜ் திருமணத்தில் முதலமைச்சர் பங்கேற்றது போன்ற காணொளி பகிரப்பட்டுள்ளது. எனவே, அதனை உடனடியாக நீக்கியும், அந்த வீடியோவை பகிர்ந்தவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த சிலர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது இவ்வழக்கை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரபரப்பி வருவதாகவும், அவர்கள் மீது அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பொள்ளாச்சி வழக்கில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளம் ஒன்றில், 1 நிமிடம் 39 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த காணொளியில் பார் நாகராஜனின் திருமணத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலந்து கொண்டது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த காணொளி பொள்ளாச்சி ஜெயராமன் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியாகும்.
மக்கள் மத்தியில் அ.தி.மு.க.,வினரின் பெயரை சீர்குலைக்கும் பொருட்டு, அந்த சமூக வலைதளங்களில் பார் நாகராஜ் திருமணத்தில் முதலமைச்சர் பங்கேற்றது போன்ற காணொளி பகிரப்பட்டுள்ளது. எனவே, அதனை உடனடியாக நீக்கியும், அந்த வீடியோவை பகிர்ந்தவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.