கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள மீன் வளர்ப்புக் குளங்களில் வெளிநாட்டு கெளுத்தி மீன் இனங்களை வளர்க்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள மீன் வளர்ப்புக் குளங்களில் வெளிநாட்டு கெளுத்தி மீன் இனங்களை வளர்க்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி, மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு கெளுத்தி மீனினங்களை உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் ஆணைய மீறி தடை செய்யப்பட்ட கெளுத்தி மீனினங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் வளர்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்புடைய மீன் வளர்ப்புக் குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அகற்றப்படும்.
மேலும், மீன் பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை, வெள்ளிக் கெண்டை மற்றும் கண்ணாடிக் கெண்டை மீன்கள் போன்ற இந்த அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்த்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி, மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு கெளுத்தி மீனினங்களை உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் ஆணைய மீறி தடை செய்யப்பட்ட கெளுத்தி மீனினங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் வளர்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்புடைய மீன் வளர்ப்புக் குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அகற்றப்படும்.
மேலும், மீன் பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை, வெள்ளிக் கெண்டை மற்றும் கண்ணாடிக் கெண்டை மீன்கள் போன்ற இந்த அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்த்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.