கோவை : இதுவரை 28 முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள கோவையைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகமது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் களமிறங்குகிறார்.
கோவை : இதுவரை 28 முறை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள கோவையைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர் முகமது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் களமிறங்குகிறார்.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 28 முறை போட்டியிட்டு உள்ளார். தற்போது 29-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் வேட்பு மனுவை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில், தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை மாவட்ட வருவாய் அலுவலருமான ராமதுரை முருகனிடம் இன்று அளித்தார்.

பின்னர், இது குறித்து நூர் முகமது கூறுகையில், "ஆண்டிபட்டி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டேன். திருச்சி, திருவாரூர், மதுரை, சாத்தான்குளம், திருச்செந்தூர், திருமங்கலம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் இதுவரை போட்டியிட்டு உள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சியில் போட்டியிட உள்ளேன். இதுவரை போட்டியிட்டதில் அதிகபட்சமாக 5,000 ஓட்டுகள் பெற்றுள்ளேன். தொடர்ந்து வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களிலும் போட்டியிடுவேன்," என தெரிவித்தார்.
மஞ்சள் தலைப்பாகை அணிந்து ஒவ்வொரு முறையும் மனு தாக்கல் செய்ய வருவதன் காரணம் குறித்து கேட்டதற்கு, "மஞ்சள் நிறம் மங்களகரமானது. மக்கள் மங்களகரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம்," என்றார் தேர்தல் மன்னன் நூர் முகமது.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 28 முறை போட்டியிட்டு உள்ளார். தற்போது 29-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் வேட்பு மனுவை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில், தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை மாவட்ட வருவாய் அலுவலருமான ராமதுரை முருகனிடம் இன்று அளித்தார்.

பின்னர், இது குறித்து நூர் முகமது கூறுகையில், "ஆண்டிபட்டி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டேன். திருச்சி, திருவாரூர், மதுரை, சாத்தான்குளம், திருச்செந்தூர், திருமங்கலம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் இதுவரை போட்டியிட்டு உள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சியில் போட்டியிட உள்ளேன். இதுவரை போட்டியிட்டதில் அதிகபட்சமாக 5,000 ஓட்டுகள் பெற்றுள்ளேன். தொடர்ந்து வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களிலும் போட்டியிடுவேன்," என தெரிவித்தார்.
மஞ்சள் தலைப்பாகை அணிந்து ஒவ்வொரு முறையும் மனு தாக்கல் செய்ய வருவதன் காரணம் குறித்து கேட்டதற்கு, "மஞ்சள் நிறம் மங்களகரமானது. மக்கள் மங்களகரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம்," என்றார் தேர்தல் மன்னன் நூர் முகமது.