பொள்ளாச்சி விவகாரம் : கோவையில் பெண் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 70 ஆயிரம் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் இன்று இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதோடு, பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் நேரடியாக மேற்பார்வை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்ற வாயில் முன்பாக கையில் பதாகைகள் ஏந்தியவாறு பெண் வழக்கறிஞர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்வதோடு, அவரை முதன்மை குற்றவாளியாக இணைக்க வேண்டும் என்றும், அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிதி கிடைக்கும் வரை வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...