கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார், மக்கள் தான் எஜமானர்கள், நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு எனக் கூறினார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார், மக்கள் தான் எஜமானர்கள், நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு எனக் கூறினார்.
17-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் துவங்கி விட்டன. தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் வேட்பு மனுக்கள் பெறபட்டு வருகின்றன. கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, இன்று முதல் வேட்பு மனுவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் ராசாமணியிடம் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் வசந்தகுமார் பேசியதாவது :- பண பலத்திற்க்கும், ஜாதிய அரசியலுக்கும் அப்பாற்பட்டு புது முயற்சியாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் தன்னை நம்பி ஓட்டளிப்பாளர்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறேன். தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள். நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு, என்றார்.
வசந்தகுமாரின் மனைவி சசிகலா பானு வழக்கறிஞராக உள்ளார். இவரது ஒரே மகன் சரண் பிரபு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து, வேட்பு மனு விண்ணப்பத்தை பெற சமத்துவ மக்கள் கட்சி பொள்ளாச்சி வேட்பாளர் சி.டி.மணிகண்டன் வந்தார்.
இனி வரும் நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய கட்சியினர வருவதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
17-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் துவங்கி விட்டன. தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் வேட்பு மனுக்கள் பெறபட்டு வருகின்றன. கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, இன்று முதல் வேட்பு மனுவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் ராசாமணியிடம் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் வசந்தகுமார் பேசியதாவது :- பண பலத்திற்க்கும், ஜாதிய அரசியலுக்கும் அப்பாற்பட்டு புது முயற்சியாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் தன்னை நம்பி ஓட்டளிப்பாளர்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறேன். தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள். நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு, என்றார்.
வசந்தகுமாரின் மனைவி சசிகலா பானு வழக்கறிஞராக உள்ளார். இவரது ஒரே மகன் சரண் பிரபு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து, வேட்பு மனு விண்ணப்பத்தை பெற சமத்துவ மக்கள் கட்சி பொள்ளாச்சி வேட்பாளர் சி.டி.மணிகண்டன் வந்தார்.
இனி வரும் நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய கட்சியினர வருவதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.