நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.,தேர்தல் அறிக்கை வெளியீடு

நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.,தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.



நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.,தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அவை பின்வருமாறு :-

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை

மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்

மத்திய அரசின் பட்டியலில் இருக்கும் கல்வி, மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை இணைஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் வசூல் ரத்து செய்யப்படும்.

தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் துறை வேலைவாய்ப்புளில் இட ஒதுக்கீடு முறைப்படுத்தப்படும்

கேபிள் டிவி கட்டணத்தை பழைய முறையில் வசூலிக்க நடவடிக்கை

அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கு நிலையான இந்திய குடியுரிமை வழங்கப்படும்

பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையிலான சட்டம் கொண்டு வரப்படும்.

சமூக ஊடகங்களில் பெருகும் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய சட்டம்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசக் கருவிகள வழங்கப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை மாற்றியமைக்கப்படும்.

50 லட்சம் பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

1 லட்சம் பேர் சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிரந்தர வீடு கட்டித் தரப்படும்.

கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும்.

காவிரி டெல்டா பகுதிகள் பதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் போடாமல், விலை குறைக்கப்படும்.

வேளாண்மைக்கு நாடாளுமன்றத்தில தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

பெண்கள் சுய தொழில் செய்ய வட்டியில்லா ரூ.50,000 கடன் வழங்கப்படும்.

சேது சமுத்திர திட்டப் பணிகள் மீண்டும் செயல்படுத்தப்படும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...