Breaking : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் ; நக்கீரன் கோபாலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் ஆஜராக உத்தரவு

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலை வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.



கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலை வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 11-ம் தேதி பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக அமைச்சர்கள், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வின் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் புகார் அளித்திருந்தார்.

இதேபோல, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில், உண்மைக்கு மாறான செய்தியை திட்டமிட்டு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். 

இந்த நிலையில், இந்தப் புகார்கள் தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபாலை, சைபர் கிரைம் போலீசார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சென்னையில், விசாரணைக்கு அழைப்பது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது என நக்கீரன் பத்திரிக்கையின் வழக்கறிஞர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 25ம் தேதி நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை, கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...