கோவை : மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேலின் ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைமை ஏற்றுக் கொண்டது.
கோவை : மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேலின் ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைமை ஏற்றுக் கொண்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வந்தது. அந்த நேர்காணல் முடிவு பெறாத வேளையில், அக்கட்சியின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே. குமரவேல், தனது முகநூல் பக்கத்தில், கடலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியிட்டிருந்தார்.
ஜனநாயக முறைப்படி, வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு, அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்காமல் சி.கே. குமரவேல், மக்கள் நீதி மய்யக் கட்சியின் கடலூர் வேட்பாளர் என தகவல் வெளியிட்டிருப்பது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என மக்கள் நீதி மய்யத்தின் தலைமை தெரிவித்தது.
இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேல், கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தகவல் அளித்துள்ளார். நேர்காணலுக்குக் கூட வராமல், தேர்தலில் தான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என அவர் கூறியுள்ளார். மேலும், ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு முறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது என விளக்கமளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வந்தது. அந்த நேர்காணல் முடிவு பெறாத வேளையில், அக்கட்சியின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே. குமரவேல், தனது முகநூல் பக்கத்தில், கடலூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியிட்டிருந்தார்.
ஜனநாயக முறைப்படி, வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு, அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்காமல் சி.கே. குமரவேல், மக்கள் நீதி மய்யக் கட்சியின் கடலூர் வேட்பாளர் என தகவல் வெளியிட்டிருப்பது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என மக்கள் நீதி மய்யத்தின் தலைமை தெரிவித்தது.
இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேல், கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தகவல் அளித்துள்ளார். நேர்காணலுக்குக் கூட வராமல், தேர்தலில் தான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என அவர் கூறியுள்ளார். மேலும், ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு முறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது என விளக்கமளித்துள்ளார்.