மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5.98 லட்சம் பறிமுதல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வானகத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.98 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வானகத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.98 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 

மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஆறு தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, நகர் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய சாலைகளான அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை, கோவை - உதகை சாலை என அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.



இந்த நிலையில், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான ரவிச்சந்திரன் தலைமையிலான ஒரு குழு இன்று மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் பிரிவில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலை வழியே வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர், சோதனையில், இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ. 5.98 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் குமரேசனிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 

அதில், பணத்தைக் கொண்டு வந்தவர் அப்துல் ஹக்கீம் என்பதும், மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் வியாபாரத்திற்காக இந்தத் தொகையை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இருப்பினும், தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக பணத்தைக் கொண்டு வந்ததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 



இது குறித்து கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்த பின் மேட்டுப்பாளையம் கருவூலத்தில் பணம் சீலிட்டு ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...