எஸ்.பி.யை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோவை ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். எஸ்.பி. பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். எஸ்.பி. பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயர்நீதிமன்ற பெண் நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்றும், நாளையும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு எதிராக கல்லூரியின் முதல்வர் செயல்படுவதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதேபோல, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...