பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக சி.மகேந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை அதிமுக தலைமைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் சி மகேந்திரன் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலுடன் பல்வேறு தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மீண்டும் அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அதிமுக இந்த தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு பலம்வாய்ந்த தொகுதியாக இருக்கும் இந்த பொள்ளாச்சி தொகுதியில் தற்போது பெண்கள் பாலியல் விவகாரம் தொடர்பாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும் சி.மகேந்திரனை எதிர்த்து திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் போட்டியிடவுள்ளார். இந்த பாலியல் விவகாரத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக பொள்ளாச்சி பகுதியில் எதிர்ப்புகள் இருந்தாலும் சி மகேந்திரன் அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலுடன் பல்வேறு தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மீண்டும் அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அதிமுக இந்த தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு பலம்வாய்ந்த தொகுதியாக இருக்கும் இந்த பொள்ளாச்சி தொகுதியில் தற்போது பெண்கள் பாலியல் விவகாரம் தொடர்பாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும் சி.மகேந்திரனை எதிர்த்து திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் போட்டியிடவுள்ளார். இந்த பாலியல் விவகாரத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக பொள்ளாச்சி பகுதியில் எதிர்ப்புகள் இருந்தாலும் சி மகேந்திரன் அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.