கோவை : பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி ஆபாசம் படம் எடுத்த விவகாரம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை அடுத்த மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சி கொடூரம் தொடர்பான அனைத்து குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும், அவர்கள் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் எச்சரித்தனர்.

பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி ஆபாசம் படம் எடுத்த விவகாரம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை அடுத்த மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சி கொடூரம் தொடர்பான அனைத்து குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும், அவர்கள் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் எச்சரித்தனர்.