வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

கோவை : வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


கோவை : வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 



தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, பதற்றம் நிறைந்த பகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெறவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் போலீஸ் அணிவகுப்புகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 



இந்த நிலையில், இன்று காந்திபுரத்தில் இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியானது கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த அணிவகுப்பில் இந்தோ - திபெத் பார்டர் ஃபோர்ஸினர் 50 பேரும், கோவை மாநகர காவல் துறையினர் 100 பேரும், சிறப்பு காவல்துறையினர் 20 பேரும் கலந்து கொண்டனர். இந்த அணி வகுப்பானது காந்திபுரத்திலிருந்து கிராஸ்கட் சாலை வழியாக சென்று சிவானந்தா காலனியில் நிறைவடைந்தது. அணிவகுப்பின் போது, போலீசார் சாலையெங்கும் துப்பாக்கி ஏந்தியபடி, பொதுமக்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று உணர்த்தும் வகையில் அணிவகுப்பை நடத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...