திருப்பூர் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அ.ம.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் ஈரோடு செயலாளர் எஸ்.ஆர். செல்வம் போட்டியிடுகிறார்.
திருப்பூர் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அ.ம.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் ஈரோடு செயலாளர் எஸ்.ஆர். செல்வம் போட்டியிடுகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் இன்று வெளியிட்டார். அதில், கொங்கு மண்டல மாவட்டங்களில் ஒன்றான திருப்பூரில், அ.தி.மு.க., சி.பி.ஐ. ஆகிய கட்சிகளை எதிர்த்து அ.ம.மு.க. சார்பில் களமிறங்கும் எஸ்.ஆர். செல்வம் களமிறக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், கொங்கு மண்டலத்தில் புது முகத்தை அக்கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 65 வயதான எஸ்.ஆர். செல்வம் திருப்பூரில் முதல்முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலத்தில் உள்ள சனார்பதி கிராமத்தில் பிறந்த இவர் அ.தி.மு.க.வின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1989-ம் ஆண்டு பவானிசாகர் அம்மா பேரவையின் செயலாளராகவும், 2001-ம் ஆண்டு கவுன்சிலராகவும் இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு பவானிசாகர் அ.தி.மு.க. செயலாளராக செயல்பட்ட இவர், பின்னர் ஈரோடு பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் பிரிந்து வந்த நிலையில், 2017-ம் ஆண்டு அ.ம.மு.க.வின் ஈரோடு மாவட்ட ஊரக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் இதற்கு முன்னதாக எந்தவொரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கான தேர்தல்களில் போட்டியிட்டது இல்லை. எனவே, இந்தத் தேர்தல் அவருக்கு மிகவும் முக்கியமானதாகும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் இன்று வெளியிட்டார். அதில், கொங்கு மண்டல மாவட்டங்களில் ஒன்றான திருப்பூரில், அ.தி.மு.க., சி.பி.ஐ. ஆகிய கட்சிகளை எதிர்த்து அ.ம.மு.க. சார்பில் களமிறங்கும் எஸ்.ஆர். செல்வம் களமிறக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், கொங்கு மண்டலத்தில் புது முகத்தை அக்கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 65 வயதான எஸ்.ஆர். செல்வம் திருப்பூரில் முதல்முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலத்தில் உள்ள சனார்பதி கிராமத்தில் பிறந்த இவர் அ.தி.மு.க.வின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1989-ம் ஆண்டு பவானிசாகர் அம்மா பேரவையின் செயலாளராகவும், 2001-ம் ஆண்டு கவுன்சிலராகவும் இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு பவானிசாகர் அ.தி.மு.க. செயலாளராக செயல்பட்ட இவர், பின்னர் ஈரோடு பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் பிரிந்து வந்த நிலையில், 2017-ம் ஆண்டு அ.ம.மு.க.வின் ஈரோடு மாவட்ட ஊரக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் இதற்கு முன்னதாக எந்தவொரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கான தேர்தல்களில் போட்டியிட்டது இல்லை. எனவே, இந்தத் தேர்தல் அவருக்கு மிகவும் முக்கியமானதாகும்.