கோவை : விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக திருப்பூரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
கோவை : விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக திருப்பூரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்காக, அனைத்துக் கட்சிகளும் தொகுதி உடன்பாடுகளை முடித்து வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயனின் அறிமுக கூட்டம் தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் சுப்பராயன் பேசியதாவது :- இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவை காப்பாற்ற மத்திய பா.ஜ.க. அரசையும், தமிழகத்தை காப்பாற்ற அ.தி.மு.க அரசையும் அப்புறப்படுத்துவதற்கான தேர்தல். திருப்பூரில் சிறு,குறு தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது. 30 சதவிகித தொழில்துறை நலிவடைந்துவிட்டது. 3ல் 2 பங்கு விவசாயம் முடிந்துவிட்டது. மோடி வென்றால் திருப்பூர் சொர்க்கமாக மாறும் என பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், தற்போது சுடுகாடாக மாறியுள்ளதால், அவற்றை மீட்டெடுக்கும் வகையில் விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்து திருப்பூரில் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளோம், என்றார்.

இந்த அறிமுக கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.