கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் பா.ஜ.க.வும், திருப்பூரில் அ.தி.மு.க.வும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் பா.ஜ.க.வும், திருப்பூரில் அ.தி.மு.க.வும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். கோவையில் பா.ஜ.க.வும், திருப்பூரில் அ.தி.மு.க.வும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.போட்டியிடும் தொகுதிகள் : சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை (தெற்கு).
பா.ம.க. : தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஶ்ரீபெரும்புதூர்.
பா.ஜ.க. : கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி
தே.மு.தி.க.: வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர்.
வேலூரில் புதிய நீதிக்கட்சியும், தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரசும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசும் போட்டியிட இருக்கின்றன.